சரக்கு ரயில் கூரையில் நின்று கொண்டே பயணம் செய்த மர்மநபரால் பரபரப்பு!!

 
ரயில்

தமிழகத்தில் ரயில் சேவைகள் 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் கொரோனாவிற்கு முந்தைய கால அட்டவணைப்படி இயக்கப்பட்டு வருகின்றன. இதில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. . அந்த சரக்கு ரயில் கூரையின் மீது 40 வயதான நபர் ஒருவர் தூங்கியபடி ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தார்.

ரயில்

இதைத்தொடர்ந்து ரயில் விண்ணமங்கலம் ரெயில் நிலையம் அருகே வந்த போது தூக்கத்தில் இருந்து அந்த மர்ம நபர் விழித்துக் கொண்டு எழுந்து நின்றார். அங்கிருந்தவர்கள் இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.இதை கவனித்துவிட்ட ஸ்டேஷன் மாஸ்டர் உடனடியாக வாணியம்பாடி ரெயில் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.இந்நிலையில் அந்த சரக்கு ரெயிலை வாணியம்பாடியில் நிறுத்திய காவல்துறையினர் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் அந்த மர்ம நபருடன் பேச்சு வார்த்தை நடத்தி நாசுக்காக கீழே இறக்கினர்.

ரயில்

அதற்கு முன்னதாக மின் இணைப்பை துண்டித்து எந்த ஆபத்தும் நேராமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பிடிபட்ட மர்ம நபரிடம் ஜோலார்பேட்டை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் அங்கிருந்து ரெயில் மேற்கூரையில் தனது பயணத்தை தொடங்கினார்? ஏன் இவ்வாறு பயணித்தார்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web