சென்னையில் பரபரப்பு! பயங்கர சப்தத்துடன் நடுரோட்டில் வெடித்து சிதறிய நாட்டு வெடிகுண்டு!

 
மாங்காடு நாட்டுவெடிகுண்டு

சென்னை, பேரூர் அருகே நடுரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த மர்ம நபர்கள் 3 பேர் கொண்டு சென்ற பை கீழே விழுந்ததில் அதில் இருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாங்காடு அடுத்த பரணி புத்தூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் மோட்டார் சைக்கிளில் 3 மர்ம நபர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் கையில் வைத்திருந்த பை ஒன்று கீழே விழுந்தது. அதில் இருந்து நாட்டு வெடிகுண்டுகள் பெரும் சத்தத்துடன் வெடித்து சிதறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. என்ன ஆனது என்பதை அங்கிருந்தவர்கள் தெரிந்து கொள்வதற்குள்ளாகவே 3 மர்ம ஆசாமிகளும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.

மாங்காடு நாட்டுவெடிகுண்டு

இது குறித்து பொது மக்கள் போலீசார் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பொது மக்களிடம் விசாரணை மேற்கொண்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் மக்கள் பெரும் பதற்றத்துடன் காணப்பட்டனர். அப்போது சிறிது தூரத்தில் காலில் அடிப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் தெருவில் படுத்து கிடந்ததைப் பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இளைஞர் அருகில் சென்ற போலீசார், அவரிடம் விசாரித்த போது அவர், ஐயப்பன்தாங்கலை சேர்ந்த வினோத்குமார் (27) என்பதும் பதிவேடு குற்றவாளி என்பதும் தெரிய வந்தது.

வினோத் குமார் தனது நண்பர்கள் 2 பேருடன் மோட்டார் சைக்கிளில் நாட்டு வெடிகுண்டு கொண்டுச் சென்ற போது, நாட்டு வெடிகுண்டு தவறி கீழே விழுந்து வெடித்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது என்பதையும் போலீசார் விசாரணையில் தெரிந்து கொண்டனர். திடீரென நாட்டு வெடிகுண்டு கீழே விழுந்து வெடித்ததைக் கண்டு பயந்து போன நண்பர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர் என்று வினோத் குமார் தெரிவித்தார்.

க்ரைம்

இதைத் தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி தப்பிச் சென்ற 2 பேரையும் பிடிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். நாட்டு வெடிகுண்டுகளை எதற்காக எடுத்துச் சென்றனர் என்றும் ஏதேனும் சதித்திட்டத்திற்காக நாட்டு வெடிகுண்டுகளை கொண்டு சென்றார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web