நட்சத்திர ஹோட்டலில் நடந்த போதை விருந்தில் பிரபல பாலிவுட் நடிகர் மகன் கைது!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் போதை மருந்து விருந்து நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அந்த விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து விருந்தில் பங்கேற்ற 35 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில் பாலிவுட் நடிகர் சக்திகபூர் மகன் நடிகர் சித்தாந்த் உட்பட 5 பேர் போதை மருந்து உட்கொண்டிருந்தது உறுதியானது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் இறந்த போது இந்தி திரையுலகை சேர்ந்த பலரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதில் சித்தாந்தின் சகோதிரியும், நடிகையுமான ஷ்ரத்தா கபூரும் ஒருவர். ஆனால் அவருக்கு எதிராக எதுவும் நிரூபிக்கப்படவில்லை.
அதேபோல் கடந்த ஆண்டு சொகுசு கப்பலில் நடந்த விருந்தில், போதைப் பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கைது செய்யப்பட்டு, பின்னர் அவர் மீது எந்த குற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!