பிரபல நடிகர் ஸ்ரீஜித் ரவி போக்சோவில் கைது!! பகீர் பிண்ணனி!!!

 
ஸ்ரீஜித் ரவி

கேரளாவை சேர்ந்த பிரபல வில்லன் நடிகர் ஸ்ரீஜித் ரவி. இவர் 2005-ம் ஆண்டு மயூகம் என மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதே ஆண்டில் சாந்துபொட்டு படத்தின் மூலம் அவருக்கு பெரிய வெற்றி கிடைத்தது. 2014-ல் வெளிவந்த கும்கி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், வேட்டை, மதயானை கூட்டம், கதகளி, அசுரவதம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ஸ்ரீஜித் ரவி

இந்த நிலையில், நடிகர் ஸ்ரீஜித் ரவி குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக திருச்சூர் மேற்கு போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். ஸ்ரீஜித் ரவி இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

திருச்சூர் மாவட்டம் அய்யந்தோல் பகுதியில் உள்ள எஸ.என்.பார்க் அருகே கடந்த 4-ம் தேதி நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த சம்பவம் கடந்த 4-ம் தேதி மதியம் 2 மணியளவில் பூங்காவிற்கு அருகில் 11 மற்றும் 5 வயது பெண் குழந்தைகள் முன்பு ஆடையின்றி தோன்றியதாக தெரிகிறது. இதையடுத்து குழந்தைகள் இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தனர். அதன் பின்னர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

போக்சோ

புகாரின் பேரில் திருச்சூர் போலீசார், பூங்கா அருகே இருந்த சிசிடிவி காட்சியை வைத்து கறுப்பு நிற காரில் வந்த நபர் குறித்து விசாரணையை தொடங்கினர். அப்போது அவரது காரில் கிடைத்த தகவலின் அடிப்படையில் நடிகர் ஸ்ரீஜித் ரவி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேபோன்று 2016-ம் ஆண்டில், பாலக்காட்டைச் சேர்ந்த 14 பள்ளி மாணவிகள் குழு ஒன்று பொது இடங்களில் தன்னை வெளிப்படுத்தியதாக குற்றம் சாட்டியதை அடுத்து நடிகர் கைது செய்யப்பட்டார். பின்னர், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கு மீண்டும் வெளிச்சத்துக்கு வரவில்லை. தேவையான ஆதாரங்களை சேகரிக்காமல் போலீசார் நாசவேலையில் ஈடுபட்டதாக சிறுமிகளின் பெற்றோர் குற்றம்சாட்டினர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web