துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல ஒளிப்பதிவாளர்!! தட்டித் தூக்கிய காவல்துறை!!

 
ஒளிப்பதிவாளர்

சென்னை கொளத்தூரில் வசித்து வருபவர்  22 வயதான இளம் பெண். இவர் கடந்த சில காலமாக  சின்னத்திரையில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.  சின்னத்திரையில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் வளசரவாக்கம், ஓம் சக்தி நகர் பிரதான சாலையை சேர்ந்த காசிநாதன் (42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

 படப்பிடிப்பு

இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளியாகிய பல்வேறு சீரியல்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். அதனை பயன்படுத்திக்கொண்டு கொளத்தூரை சேர்ந்த துணை நடிகைக்கு சீரியலில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகவும், அது குறித்து பேச தனது வீட்டிற்கும் அழைத்துள்ளார். அதை நம்பி அங்கு வந்த அந்த பெண்ணுக்கு காசிநாதன் மது வாங்கி கொடுத்து அவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

குடும்ப வன்முறை பெண்கள் பாலியல் பலாத்காரம்

இதனையடுத்து அந்த பெண்ணிடம் காசிநாதன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அந்த பெண் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே அவர் வலுக்கட்டாயமாக பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் தனது நண்பரை தொடர்பு கொண்டு, நடந்ததை தெரிவித்துள்ளார். 

இதையடுத்து அங்கு வந்த அவரது நண்பர் அந்த பெண்ணை பத்திரமாக மீட்டதுடன், வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காசிநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web