டம்மி துப்பாக்கி வைத்திருந்த பிரபல ரவுடி கைது!

 
ரவுடி

பிரபல ரெளடியாக வலம் வந்த செல்வம் என்கிற ரோஸ் பாக்கியத்தை போலீசார் கைது செய்தனர். நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த செல்வத்தை மதுரவாயல் பகுதி அருகே போலீசார் பிடித்த போது அவர் துப்பாக்கி வைத்திருந்ததும் அது டம்மி என்று தெரிய வந்தது.

மதுரவாயல் காவல் நிலைய தலைமை காவலர் ராதாகிருஷ்ணன், குணசேகரன், பிரபு உள்ளிட்ட காவலர்கள் சென்னை வானகரம் பகுதி சோதனை சாவடி அருகே நேற்று இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

க்ரைம்

அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த இருசக்கர வாகன ஓட்டியை போலீசார் வழிமறித்து விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு சோதனை நடத்தினர். அப்போது அந்த நபரின் இடுப்பில் துப்பாக்கி ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதைத் தொடர்ந்து அவரது இருசக்கர வாகனத்தில் நாட்டு வெடிகுண்டு ஒன்றையும் போலீசார் கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.

அதன் பின்னர் போலீஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்ட அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது பெயர் செல்வம் (எ) ரோஸ் பாக்கியம் என்பதும் போரூர் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வருவதும் தெரிய வந்தது.

போலீசார் கலவரம் காவல்துறை மறியல் போராட்டம்

இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக தன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், நாட்டு வெடிகுண்டும், டம்மி துப்பாக்கியையும் வைத்திருந்ததாக கூறினார். இதைத் தொடர்ந்து செல்வத்தை போலீசார் கைது செய்து நாட்டு வெடிகுண்டையும், டம்மி துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web