சாலை விபத்தில் பிரபல ரவுடி மரணம்! சிறையில் இருந்து வெளிவந்த 10 நாட்களில் சோகம்! போலீசார் விசாரணை!

 
உசேன் பாஷா

சிறையில் தண்டனை அனுபவித்து விட்டு, வெளியே வந்த 10 நாட்களிலேயே பிரபல ரவுடி நடுரோட்டில்  சாலை விபத்தில் பலியான சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து, திட்டமிட்டு, பழிவாங்கும் நடவடிக்கையாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவி வருவதால் போலீசார், கொலையா, விபத்தா என்று விசாரித்து வருகின்றனர். 

செங்கல்பட்டு, தட்டார்மலைத் தெரு பகுதியில் வசித்து வருபவர் காஜா ஷெரீப். இவரது மகன் உசேன்பாஷா அந்த பகுதியில் எந்த வேலைக்கும் செல்லாமல் வழிப்பறி, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து நண்பர்களுடன் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த உசேன்பாஷா மீது செங்கல்பட்டு டவுன் காவல் நிலையத்தில் 2 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையில் மதுராந்தகம் பெட்ரோல் பங்க் காவலாளியை கொலை செய்த வழக்கில் கடந்த வருடம் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வந்தார். தண்டனை முடிந்து கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் உசேன்பாஷா சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

செங்கல்பட்டு காவல்நிலையம்

இந்நிலையில் சாலை விபத்தில் உசேன் பாஷா இறந்து விட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. விபத்து நடந்த செங்கல்பட்டு அடுத்த படாளம் பகுதிக்கு சென்ற போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், உசேன் பாஷா தனது நண்பரை பார்க்க இருசக்கர வாகனத்தில் செங்கல்பட்டு நோக்கி சென்றுள்ளார். அப்போது சென்னை தேசிய நெடுஞ்சாலை பழவேலி பகுதியில் சென்ற இரு சக்கர மோட்டார் வாகனத்தின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயமடைந்த உசேன் பாஷா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். இருப்பினும் உசேன்பாஷா இடுப்பில் பெரிய அளவிலான பட்டாகத்தி ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உசேன் பாஷாவின் உடலை மீட்ட போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அரசு மருத்துவமனை செங்கல்பட்டு

உயிரிழந்த உசேன் பாஷா சாலை விபத்தில், பலத்த காயத்துடன் மூளை சிதறி பலியானாரா? அல்லது பட்டாக்கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாரா என்பதில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே உண்மை நிலவரம் வெளிச்சத்துக்கு வரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டர் சட்டத்தில் தண்டனை அனுபவித்துவிட்டு 10 நாட்களுக்கு முன்னர் வெளியில் வந்த பிரபல ரவுடி திடீரென்று உயிரிழந்து இருப்பதும், அவரது மரணத்தில் மர்மம் நீடிப்பதும் செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web