பிரபல பாடகர் கொலை வழக்கு! முக்கிய பெண் குற்றவாளி விமான நிலையத்தில் கைது!

 
சித்து

பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான தீபக் டினுவின் காதலி ஜோதி தியோல் மும்பை விமான நிலையத்தில் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ரவுடி தீபக் டினுவின் காதலி ஜிதிந்தர் கவுர் என்ற ஜோதி தியோல். இவர் மாலத்தீவுக்கு விமானம் மூலம் தப்பிச் செல்ல இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி போலீசார் உஷாரானார்கள். அதன்படி  மும்பை விமான நிலையத்திற்கு சென்ற பஞ்சாப் போலீசார் ஜோதி தியோலை அதிரடியாக கைது செய்தனர்.

நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநில தலைவராக நியமனம்

பாடகர் சித்து கொலை வழக்கில் கைதான ரவுடி தீபக் டினு கடந்த அக்டோபர் 1ம் தேதி போலீஸ் பாதுகாப்பில் இருந்து தப்பியோடிய நிலையில் அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கைது சம்பவம் குறித்து டி.ஜி.பி. கவுரவ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, ‘‘தப்பியோடிய ரவுடி தீபக் டினுவின் காதலி உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் மும்பை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

தீப் சித்து

இதைத்தொடர்ந்து ஜோதி தியோலை போலீசார் மான்சா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதைத்தொடர்ந்து 5 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

கைது செய்யப்பட்ட ஜோதி தியோல், பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தின் கந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஜோதி தியோலிடம் விசாரணை நடத்தினால் போலீசிடம் இருந்து தப்பியோடிய ரவுடி குறித்த தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web