கிணற்றில் சாக்குமூட்டையில் அழுகிய நிலையில் பெண்பிணம்!! பகீர் பிண்ணனி!!

 
கொலை

அரியலூர் மாவட்டம் அருங்கால் கிராமத்தில் வசித்து வருபவர் ரெங்கராஜன்.  இவருக்கு சொந்தமான பாழடைந்த கிணறு ஒன்றில் குப்பையோடு குப்பையாக சேர்ந்து சாக்கு மூட்டை ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இந்த இதை பார்த்து அதிர்ந்து போன மக்கள் கூட்டம் அந்த இடத்தில் திரளத்தொடங்கியது. 

கிணறு

உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் மிதந்து கொண்டிருந்த சாக்குமூட்டையை வெளியில் எடுக்க தயாரானார்கள். துரிதமாக செயல்பட்டு தீயணைப்புத் துறையினர் கிணற்றில் மிதந்த மூட்டையை மேலே எடுத்தனர். பின்னர் சாக்கு மூட்டையை பிரித்து பார்த்த போது, அதில் ஒரு பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த கீழப்பழுவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் சாக்குமூட்டையில் பிணமாக மீட்கப்பட்டவர் செல்வி என்பவரின் தோழி என்பது தெரிய வந்தது. அந்த பெண்ணின் நகைக்கு ஆசைப்பட்ட செல்வி அவரை கொலை செய்து தனது மற்ற தோழிகள் உதவியுடன் சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் போட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து குற்றவாளி செல்வியை கரூரில் வைத்து போலீசார் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அரியலூர்கொல்லப்பட்ட பெண் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? சொத்து பிரச்சினையா? அல்லது வேறு ஏதேனும் விவகாரமா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிணற்றில் அழுகிய நிலையில் பெண் பிணம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web