சினிமா தியேட்டரில் சண்டை! ஊழியரை தாக்கிய போதை ஆசாமிகள்!

 
திரையரங்கில் சண்டை

திருவள்ளூர் எம்ஜிஎம் நகரில் உள்ள ராக்கி சினிமாஸ் திரையரங்கில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் திரையிடப்பட்டு உள்ளது. திரையரங்கில் மது அருந்தி விட்டு வருபவர்களுக்கு டிக்கெட்டுகள் வழங்கப்படுவதில்லை என்ற வழக்கம் உள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் படம் தொடங்கி இடைவேளை விடும் நேரத்தில் வள்ளுவர் புரம் பகுதியைச் சேர்ந்த கோகுல் கொடியரசு மற்றும் சுகன் ஆகியோர் டிக்கெட் கேட்ட நிலையில், இடைவேளை விடப்படுகிறது அதனால் டிக்கெட் இல்லை என்றும் மது அருந்தியுள்ளதால் டிக்கெட் தர ஊழியர்கள் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

`விக்ரம்’ -ல் வில்லனாக விஜய் சேதுபதி!

இதனால் ஆத்திரமடைந்த இருவரும் சென்ற சிறிது நேரத்தில் 10 பேர் கொன்ட கும்பலுடன் தியேட்டருக்கு வந்து அங்கு பணிபுரியும் விக்னேஷ் என்பவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் நகர போலீசில் ராக்கி சினிமாஸ் மேலாளர் அரசு புகார் அளித்தார். 

போலீஸ் அதிகாரி வேடத்தில் அட்டகாசமாக தயாராகும் விக்ரம்!

புகாரின் பேரில் திருவள்ளூர் நகர போலீசில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். தியேட்டருக்குள் புகுந்து ஊழியர்களை தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web