டாஸ்மாக் கடையில் தீ விபத்து! ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்!

 
டாஸ்மாக் தீ விபத்து

சென்னை, கே.கே.நகர் பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்றில் அதிகாலையில் தீவிபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  சென்னை கே.கே.நகர் பகுதி ராஜமன்னார் சாலையில் டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. எப்போதும் போல இரவு 10 மணிக்கு ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர். 

இந்நிலையில் அதிகாலை 5 மணி அளவில் டாஸ்மாக் கடையில் இருந்து கரும்புகை வெளியேறி இருக்கிறது. இதை யாரும் கவனிக்காததால், சிறிது நேரத்தில் கடை தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் அவ்வழியே சென்ற பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

டாஸ்மாக் தீ விபத்து

உடனடியாக அசோக் நகர் தீயணைப்பு துறைக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். மேலும் மதுபான கடை அருகில் கடை ஊழியர்கள் தண்ணீரை ஊற்றி பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.

இந்த திடீர் தீ விபத்தில், கடையில் இருந்த ஏராளமான மதுபாட்டில்கள் வெடித்து சிதறி பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அங்கிருந்த "ப்ரீசர் பாக்ஸ்" உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் கருகி நாசமாகி உள்ளது. ரூ.9 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாஸ்மாக்

இந்த விபத்து குறித்து டாஸ்மாக் கடையின் சூப்பர்வைசர் ராமதுரை கே.கே. நகர் போலீசில் புகார்மனு அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் மின் கசிவு ஏற்பட்டதால்தான் தீவிபத்து நிகழ்ந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது. அதிகாலையில் நடந்த தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web