அம்சலேகாவை மறந்துடுங்க... தொல்லைக் கொடுத்த மனைவி! தீர்த்து கட்டிய கணவன் கைது!

 
கள்ளக்காதல் மனைவி கொலை

கள்ளக்காதலை கைவிடச் சொல்லி தொல்லைக் கொடுத்து வந்த மனைவியை கொலை செய்த வாலிபரையும், உடந்தையாக இருந்த அக்காள் கணவரையும் போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பா கிள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு. அரசு மருத்துவமனையில் அடிபட்டு வருபவர்களுக்கு கட்டு போடும் ஊழியராக பணி செய்து வருகிறார்.  இவரது மனைவி அம்சலேகா. இவர்களுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிய நிலையில் இரண்டரை வயது நெகில் என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு  காரணமாக மனம் உடைந்த அம்சலேகா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . இதனை அறிந்து திருநாவலூர் போலீசார் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே தனது மகள் அம்சலேகா உடம்பில் காயங்கள் இருப்பதாகவும், அவர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி அவரது தந்தை திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இது சம்பந்தமாக அம்சலேகாவின் கணவன் பாபு மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது திடுக்கிடும் உண்மை வெளியானது.

அதே கிராமத்தைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண்ணுடன் பாபு கள்ளத்தொடர் வைத்திருந்ததாகவும், அதை தனது மனைவி அம்சலேகா கண்டித்து தினமும் சண்டையிட்டு வந்தததாகவும் போலீசார் விசாரணையில் பாபு தெரிவித்துள்ளார்.

 

மேலும் கணவரிடம் கோபித்து கொண்டு தாய் வீட்டில் இருந்த அம்சலேகாவை  கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பாபு சமாதானப்படுத்தி அழைத்து வந்துள்ளார். மீண்டும் அவர் மகாலட்சுமியுடன் கள்ள உறவில் இருந்ததால், அம்சலேகா கணவர் பாபுவிடம் சண்டையிட்டு வந்துள்ளார். இதனிடையே சம்பவத்தன்று  மது போதையில் வந்த பாபுவிடம் அம்சலேகா மீண்டும் சண்டையிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பாபு,  அம்சலேகாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளான். 

இதில் மயங்கி கீழே விழுந்த அம்சலேகாவை பாபுவும் அவனது அக்கா கணவர் ரவி கார்த்திக் என்பவரும் சேர்ந்து, கழுத்தை புடவையால் இறுக்கி கொலை செய்துள்ளனர்.  பின்பு கள்ளக்காதலியான மகாலட்சுமி மற்றும் அவரது கணவர் ராஜீவ்காந்தியையும் உதவிக்கு அழைத்து வந்து  நால்வரும் சேர்ந்து  கொலை செய்யப்பட்ட அம்சலேகாவின் உடலை வீட்டிற்கு பின்புறமாக உள்ள ஒரு வேப்ப மரத்தில் தூக்கு மாட்டிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு சென்றுள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.

 

இதனை அடுத்து  இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பாபு, ராஜீவ் காந்தி, மகாலட்சுமி ஆகிய மூவரையும் திருநாவலூர் போலீசார் கைது செய்து சிறைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த வழக்கில் தப்பி ஓடிய மற்றொரு குற்றவாளியான ரவி கார்த்திக் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்காதலை கைவிடுமாறு கூறிய மனைவியை கணவன் கன்னத்தில் அறைந்தால் மயங்கி கீழே விழுந்த மனைவியை, மூன்று பேர்கள் கழுத்தை இருக்கி கொன்று விட்டு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக  நாடகமாடிய கும்பலை போலீசார் கைது செய்த சம்பவம் கிராம மக்களை அதிர்ச்சியடைய  செய்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web