முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் நண்பர் வீட்டில் ரெய்டு!!
தமிழகத்தில் 2016-20 ம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்தபோது எஸ்பி வேலுமணி சுமார் ரூ.58 கோடிக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதனையடுத்து எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான மற்றும் அவருக்கு தொடர்புடைய அவரது சகோதரர் மற்றும் நெருங்கிய நண்பர் சந்திர சேகரின் இடங்களில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் வடவள்ளியில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் நண்பர் சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே 2 முறை வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில், தற்போது 3வது முறையாக சந்திரசேகருக்கு சொந்தமான 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஐடி சோதனைக்குள்ளான சந்திரசேகர் நமது அம்மா நாளிதழின் வெளியீட்டாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது..
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!