உருகி ஊற்றிய சிக்னல்கள்!! ரயில் போக்குவரத்து கடும் பாதிப்பு!!

 
ரயில் சிக்னல்


வரலாறு காணாத வெப்பம் காரணமாக இங்கிலாந்து மக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். இதன் உச்சகட்டமாக ரெயில் போக்குவரத்து சிக்னல் வெயிலில் ஐஸ்கட்டி போல் உருகிப் போனதால் போக்குவரத்தை சமாளிப்பது பெரும் சவாலாகிப் போனது.

ரயில் சிக்னல்

இங்கிலாந்து நாட்டில் கடந்த சில நாட்களாகவே 40 டிகிரி செல்சியஸ் வரை கடும் வெயில் மக்களை சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்களின இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெயிலுக்கு பயந்து மக்கள் வீட்டைவிட்டு வெளியில் வருவதை குறைத்துக் கொண்ட போதிலும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இங்கிலாந்து ரெயில்வே சிக்னல்கள் வெயிலை தாக்குப்பிடிக்க முடியாமல் ஐஸ்கட்டி போல் உருகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ரெயில் சிக்னல்கள் பாதிப்படைந்ததால் ரெயில்வே போக்குவரத்து ஸ்தம்பித்து போனது. இது குறித்து அந்நாட்டின தேசிய ரெயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் மக்கள் தங்கள் ரெயில் பயணங்களை மிகவும் கவனமாக மேற்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி வருதால் மக்கள் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

குறைந்த அளவில் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளது. மேலும் வீட்டை விட்டு அவசியமில்லாமல் வெளியில் வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.ஏற்கனவே ஸ்வீடன் நாட்டில் 40 டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்பம் வாட்டி வருவதால் அதிகளவிலான உயிரிழப்பு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web