GOOD NEWS!! இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ1000 எப்போது?! நிதியமைச்சர் முக்கிய தகவல்!!
தமிழகத்தில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் இல்லத்தரசிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ 1000 வழங்கப்படும் என அறிவித்திருந்தது. பதவியேற்று ஓராண்டு காலம் நிறைவடைந்ததை ஒட்டி சாதனை விளக்கக்கூட்டங்கள் திட்ட நிறைவு கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. அதே நேரம் தாமதமாகும் திட்டங்கள், காரணங்கள், செயல்பாடுகள் குறித்து ஸ்டாலின் துறை வாரியாக மாவட்ட செயலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும் என அறிவித்தார். அதன் ஒரு பகுதியாக இன்று மதுரையில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் , குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அதற்கான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் செயல்பாட்டு வரும். அதற்கான தீவிர ஆலோசனைகள், சாத்தியக்கூறுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!