விளையாட்டு வினையான விபரீதம்!! பப்ஜி கேம் தகராறில் நண்பனை குத்திய இளைஞர்!!

 
பப்ஜி

இன்றைய இளையதலைமுறை பிள்ளைகளிடம் ஆன்லைன் விளையாட்டுகளின் மோகம் பெருகி வருகிறது.இதனால் ஆபத்துக்களும் தொடர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளை மேற்கொண்ட போதிலும் கடந்த 2 வருடங்களாக ஆன்லைன் கல்வி கற்றதை விட இது போன்ற மோசடி கேம்களில் கனவுகளை தொலைத்து வருகின்றனர் இளைய தலைமுறையினர் என்பது வேதனையான விஷயம். 

பப்ஜி

இந்த விளையாட்டுக்கு சிறுவர்கள் தொடர்ந்து அடிமையாகி வருகின்றனர். இந்நிலையில் விளையாடுபவர்கள் கொள்ளு, சுட்டுத்தள்ளு என்ற வார்த்தைகளை உச்சரித்து கொண்டு விளையாடி வருவதாக பல பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விளையாட்டில் தோல்வி அடைந்துவிட்டால் சிறுவர்கள் செல்போனை அல்லது வீட்டில் உள்ள பொருட்களை உடைப்பது, தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வது முதல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 


திருவள்ளூர் மாவட்டம், கூடப்பாகத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவர் பக்கத்து வீட்டு நண்பர் அஜித்குமார். இருவரும் ஆன்லைன் பப்ஜி கேம் விளையாடி கொண்டிருந்தனர். அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பாடு வாக்குவாதமாக மாறத் தொடங்கியது. இந்த வாக்குவாதம் அதிகமாகி கோஷ்டி மோதலாக உருவெடுத்தது. ஆத்திரத்தில் நண்பனை கத்தியால் குத்தி விட்டான்.

பப்ஜி

இவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர்கள், உறவினர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து இதில் சம்பந்தப்பட்ட 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்  காவல்துறையினர் . ஆன்லைன்  பப்ஜி விளையாட்டால் ஏற்பட்ட தகராறில் நண்பனையே கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web