பகீர்! சேலம், திருச்சி, ஈரோடு, ஆந்திரா, கேரளா! சிறுமியின் கருமுட்டை விவகாரத்தில் 7 மருத்துவமனைகளுக்கு போலீசார் சம்மன்!

 
சிறுமி கருமுட்டை

‘சதுரங்க வேட்டை’ மனிதர்கள் இந்த சமூகத்தில் நிறைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் கவலையில்லை. பணம் மட்டுமே பிரதானம் என்பது தினந்தோறும் நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது. ஏதோ பொள்ளாச்சியில் சில பொறுக்கிகள், அரசியல் பின்புலத்தில் கொழுப்பெடுத்து திரிந்திருக்கிறார்கள் என்று பதறின காலத்தில் தான் தமிழகம் முழுவதும், பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என்று எல்லா மாவட்டத்திலும் மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்திருப்பது அம்பலமாகி, இன்னமும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அப்படி ஈரோட்டில், 16 வயது சிறுமியின் கருமுட்டை விவகாரத்தில், ஈரோட்டையும் தாண்டி திருச்சி, சேலம், ஆந்திரா, கேரளா என 7 மருத்துவமனைகளுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். பிற தனியார் மருத்துவமனைகளுக்கும் தொடர்பிருப்பதாக விசாரித்து வருகின்றனர்.

ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் சமீபத்தில் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், சிறுமியின் தாய் இந்திராணி பணத்துக்காகத் தனியார் மருத்துவமனைகளில் தன்னுடைய கருமுட்டையை விற்பனை செய்ததாகவும், தன் தாயின் 2-வது கணவர் சையத் அலி தன்னை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சிறுமி குறிப்பிட்டிருந்தார். 

அந்த புகாரின் பேரில், அவரின் தாய் இந்திராணி, வளர்ப்புத் தந்தை சையது அலி, இடைத்தரகர் மாலதி, அந்த சிறுமியின் ஆதார் அட்டையை மாற்றிக்கொடுத்த ஜான் ஆகியோரை போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறுமி கருமுட்டை

விசாரணையில் சிறுமி அளித்த தகவலின்படி சேலம், ஓசூர், திருவனந்தபுரம், திருப்பதி உள்ளிட்ட இடங்களில் போலீசார் அதிரடியான சோதனைகளை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஈரோடு மற்றும் பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சிறுமியின் கருமுட்டை விற்பனை வழக்கில் இதுவரை 7 மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என டிஐஜி முத்துசாமி தெரிவித்தார்.

சிறுமி கருமுட்டை

இதில் ஈரோட்டில் 2 மருத்துவமனைக்கும், சேலம், திருச்சி, ஒசூர், ஆந்திரா, கேரளாவில் தலா ஒரு மருத்துவமனைக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த விவகாரத்தில் மேலும் பல மருத்துவமனைகள் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணங்களிலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web