தங்கம் அதிரடி விலைக் குறைப்பு!! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!!
தமிழகத்தில் சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகப்பெரிய சேமிப்பாக அமைவது தங்கத்தில் முதலீடு தான் . எத்தனை விலையேற்றம் இருந்தாலும், தங்கத்தில் முதலீடு செய்வதையே இல்லத்தரசிகள் விரும்புகின்றனர். கடந்த சில மாதங்களாகத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம்.
தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் விலை ஏற்றத்துடனே தொடங்கிய நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. இதனால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80-க்கு உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 25 ரூபாய் குறைந்து, ரூ.4,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து, ரூ.38,080-க்கு விற்பனையாகிறது. 18 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,899-க்கு விற்பனையாகிறது.
இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 800 ரூபாய் குறைந்து, ரூ.67,700-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!