அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை !! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!

 
தங்கம்

தமிழகத்தில் சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. ரஷ்யா உக்ரைன் போர், பங்குச்சந்தை சரிவு , பொருளாதாரச் சரிவு , பணவீக்கம் பல்வேறு காரணங்களால தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகிறது. திடீரென குறையும் தங்கத்தின் விலை அடுத்த நாளே அதிகரித்து விடுகிறது. தொடர்ந்து  2 நாட்கள் கூட அதே விலையில் நீடிக்காமல் இருந்து வருவதால் முதலீட்டாளர்களும் தடுமாற்றத்தை சந்தித்து வருகின்றனர். 

தங்கம்

சென்னையை பொறுத்தவரை  கடந்த இரண்டு வாரங்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. . கடந்த 2 நாட்களாக குறைந்து விற்பனையான தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200-க்கு குறைந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 15 ரூபாய் உயர்ந்து, ரூ.4,755-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து, ரூ.38,040-க்கு விற்பனையாகிறது. 

இன்று (ஏப்ரல் 24) காலை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு 144 ரூபாய் குறைந்தது!..

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,883-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 12 ரூபாய் உயர்ந்து, ரூ.3,895-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலையில் எந்த மாற்றமில்லாமல், ரூ.66,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.66.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web