கூடா நட்பு கேடாய் முடிந்தது! கடிதம் எழுதி வைத்து, ரயில் முன்பாக பாய்ந்த வாலிபர்!

 
இளைஞர் தற்கொலை

கூடா நட்பு கேடாய் முடியும் என் வாழ்க்கையைப் போல... நண்பர்களால் சீரழிந்தேன் என கடிதம் எழுதி வைத்து விட்டு, ரயில் முன்பாக பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் மேய்க்கால் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். வெல்டிங் பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் சிதம்பரம் ரயில் நிலையத்திற்கும், மீதிகுடி ரயில் கிராசிங் பகுதி நடுவே காரைக்கால் நோக்கி சென்ற கூட்ஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் மணிகண்டன், சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து  தகவலறிந்து வந்த சிதம்பரம் ரயில்வே போலீசார்  விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட இடத்தில், மணிகண்டன் இறப்பதற்கு முன்பாக எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினார்கள்.

அந்த கடிதத்தில், அம்மா உன் பிள்ளை நல்லவன் தான். உன்னை மாதிரி எனக்கு கிடைத்தது தான் தப்பு. மற்றவர்கள் உன்னை மாதிரி இல்லை. மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு.  மானங்கெட்ட மக்கள். நம்ம ஒன்ன சொன்னா அதை விட பல மடங்கு அதிகமா சொல்லுவாங்க மானங்கெட்ட உலகம் சில பேர் என எழுதியுள்ளார். மேலும் அவர் அந்த கடிதத்தில் , அறிவு இல்லாதவர்கள் எல்லோரும் நல்லவர் எண்ணி வாழ்ந்து செத்த முட்டாள் என்றும் நல்ல மனிதன் போறான் அவனை பாம்பு கொத்துகிறது பாம்பு நல்ல பாம்பு அந்த மனிதன் நல்லவன் தான் இருந்தாலும் பாம்பு விஷத்தன்மை உடையது அது கிட்ட நம்ம போனால் கடிக்கும்.

அது போல் ஒரு நண்பன் அப்படி இருந்தாலும் நாமும் அப்படி தான் என்று பேசுவார்கள். என் நண்பர்களால் எனக்கு வந்த வினை என குறிப்பிட்டுள்ள அவர் நண்பர்களிடம் ஒரு பிரச்சனையை சொல்கிறோம். சரி, தப்பு இதை தான் செய்ய வேண்டும்,என அதை நம்மிடம் சொல்ல மாட்டார்கள். வெளியே சொல்லி விடுவார்கள்.

நண்பர்கள் எல்லாம் சில காலம்  மட்டும். உன் வாழ்க்கை உன் கையில் என்பார்கள் பொய்.  அடுத்தவன் உன்னை வீணாக்க முடிவு பண்ணிட்டா உன் வாழ்க்கை அவன் கையில். மிக்க நன்றி. கூடா நட்பு கேடில் முடியும். என் வாழ்க்கை போல என எழுதி வைத்துள்ளார். இதனை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக மணிகண்டனின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web