எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! இனி உங்க வங்கியில் அசத்தலான திட்டம் அறிமுகம்!
எஸ்பிஐ வங்கி அசத்தலான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் படி, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், இனி ஞாயிற்றுக்கிழமையிலும், பிற விடுமுறை தினங்களிலும் கூட தங்களது வங்கி கணக்கின் பரிவர்த்தனைகளையும், பிற வங்கிச் சேவைகளையும் பெறும் வகையில் புதிய திட்டத்தை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.
நாட்டின் முன்னனி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், பல்வேறு சேவைகளை பெற நேரடியாக வங்கிக்குத்தான் செல்ல வேண்டும் என்பது இல்லை. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமையில் கூட இனி எளிதாக வங்கிச் சேவையை பெற முடியும்.
Say goodbye to all your banking worries!
— State Bank of India (@TheOfficialSBI) June 26, 2022
Call SBI Contact Centre toll-free at 1800 1234 OR 1800 2100.#SBI #SBIContactCentre #TollFree #PhoneBanking #AmritMahotsav #AzadiKaAmritMahotsavWithSBI pic.twitter.com/ACJVwpqo63
இதற்கான இலவச உதவி எண்களை எஸ்பிஐ அறிவித்துள்ளது. 1800 1234 அல்லது 1800 2100 என்ற இந்த இலவச உதவி எண்கள் மூலம், எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 44 கோடி வாடிக்கையாளர்களும், வீட்டிலிருந்தே அதுவும் ஞாயிற்றுக்கிழமையிலும் கூட வங்கிச் சேவையை பெற முடியும். பல சேவைகளைப் பெற வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வரவேண்டிய தேவையே இருக்காது.
உங்களது வங்கித் தொடர்பான நடவடிக்கைகளைப் பற்றி இனி கவலைப்பட வேண்டாம். எஸ்பிஐயின் 1800 1234 அல்லது 1800 2100 என்ற இலவச உதவி எண்களுக்கு அழையுங்கள் என்று எஸ்பிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 24x7 முறையில் வங்கிச் சேவையை பெற முடியும்.
வங்கிக் கணக்கிலிருக்கும் தொகை, கடைசியான மேற்கொண்ட 5 பணப்பரிவர்த்தனைகள், காசோலையின் நிலை, ஏதேனும் காரணத்தால் ஏடிஎம் அட்டை ரத்து செய்யப்பட்டால், புதிய ஏடிஎம் அட்டைக்கு விண்ணப்பித்தல் போன்ற பல சேவைகளை இனி வீட்டிலிருந்த படியே விடுமுறை தினங்களிலும் பெற முடியும் என்கிற அறிவிப்பு எஸ்பிஐ வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!