அரசு பேருந்து கவிழ்ந்து கோர விபத்து!! 18 பேர் படுகாயம்!!

 
விபத்து

சென்னையில் இருந்து தஞ்சாவூர் சென்று கொண்டிருந்த  அரசு பேருந்து ஒன்று சாலையோர வாய்க்கால் மதகில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 18 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து நேற்று அதிகாலை, கும்பகோணம் அருகே கோவிலாச்சேரி என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது.

ஆம்புலன்ஸ்

ஓட்டுனரின்  கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர வாய்க்கால் மதகில் மோதி பேருந்து பக்கவாட்டில் கவிழ்ந்து விழுந்தது.இந்த விபத்தில் ஓட்டுனர் கருணாமூர்த்தி, நடத்துனர்  கார்த்திகேயன், மற்றும் பேருந்தில் பயணம் செய்த 18 பயணியர்கள் படுகாயமடைந்தனர்.

போலீஸ்
அக்கம் பக்க கிராமத்தில் வசிப்பவர்கள் உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அத்துடன் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். விபத்தில்  படுகாயமடைந்தவர்களை மீட்டு,  ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web