எம்.ஜி.ஆர் பாட்டுக்கு பாட்டியின் உற்சாக நடனம்! வைரலாகும் வீடியோ!
இன்றைய ‘வொய் திஸ் கொலவெறி’ எல்லாம் இந்த பாட்டுக்கு முன்னாடி மண்டியிடனும்’ என்கிற ரேஞ்சில் ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்’ என்று ஒலிக்கத் துவங்கியதுமே தன்னையும் மறந்து, ஓடும் பேருந்தில் நடனமாட தொடங்குகிறார் பாட்டி. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இருந்து கோவை நோக்கி தனியார் பேருந்து பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னாள் முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆர் நடித்த ‘எங்க வீட்டு பிள்ளை’ படத்தில் இடம் பெற்ற ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்..’ என்ற பாடல் ஓடிக்கொண்டு இருந்தது.
அந்த பேருந்தில் பயணம் செய்த மூதாட்டி ஒருவர், அந்த பாடலை கேட்டவுடன் தன்னையும் மறந்து, தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உற்சாகமாக பாடலுக்கு நடனம் ஆடினார். பேருந்தில் நின்ற படி பயணம் செய்த அவர் ஒற்றை கையில் சைகைகள் காட்டி உடலை அசைத்து நடனமாடினார்.
மூதாட்டி நடனத்தை கண்டு ரசித்த சக பயணிகள், தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர். அந்த வீடியோவை பயணி ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். தற்பொழுது இந்த மூதாட்டியின் நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. காலம் கடந்தும் எம்ஜிஆரின் பாடல் அனைவரையும் ரசிக்க வைக்கும் படியாகவும், வயதானவர்களும் ஆடும் படியாகவும் இருக்கிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!