மகிழ்ச்சி!! இந்தியாவில் குரங்கு அம்மை இதுவரை இல்லை!! மத்திய சுகாதாரத் துறை திட்டவட்டம்!!
உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா மிகப்பெரிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகிறது. அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகின்றன. தற்போது பெரும்பாலான நாடுகள் தடுப்பூசி , சுகாதார சுத்தம் மூலம் அவைகளை கட்டுப்படுத்தத் தொடங்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளது. இந்நிலையில் குரங்கு அம்மை உலக நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, அமெரிக்கா உட்பட சுமார் 20 நாடுகளில் 200 பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த குரங்கு காய்ச்சலால் ஓரினச் சேர்க்கையாளர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் என ஒரு மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது. குரங்கு அம்மை பரவல் து குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 'உலக தொற்று அபாய தயார்நிலை' குழுவின் இயக்குனர் சில்வி பிரையன்ட் விடுத்த செய்திக் குறிப்பில் ''மக்கள் கவலைப்படும் அளவுக்கு குரங்கு அம்மை வேகமாக பரவாது. ஆனால் படிப்படியாக இது சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம் உள்ளது.
இதை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசியும், முறையான சிகிச்சையும் மட்டுமே இதற்கு முழுமையான தீர்வு. மேலும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்துவதே, இதன் பரவலை தடுப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் வரும் காலகட்டங்களில் குரங்கு காய்ச்சல் உலகம் முழுவதும் இன்னும் அதிக எண்ணிக்கையில் பாதிக்கும் அபாயம் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் குரங்கு அம்மை நோய் குறித்து மத்திய சுகாதாரத் துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உலகின் பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இந்த நோய் சமூகப் பரவலாக மாறலாம் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை இதுவரை குரங்கு அம்மை நோய் தொற்று கண்டறியப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் குரங்கு அம்மை நோய் குறித்த உலக சுகாதார அமைப்பின் அறிவுரைகளை இந்தியா தொடர்ந்து பின்பற்றி வருகிறது எனவும் விளக்கம் அளித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!