இன்று 13 மாவட்டங்களில் கனமழை!! வெளில போனா குடை எடுத்திட்டு போங்க!!

 
மழை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் மழை தொடரும் எனவும், இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி  13 மாவட்டங்களில் கனமழை  பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை

அதன்படி, கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை,ராணிப்பேட்டை உட்பட  13 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் 2 நாட்களுக்கு லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல், ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும்  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web