13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!! மக்களே உஷார்!!

 
மழை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழகம், ,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் .

இடி மின்னல் மழை



குறிப்பாக,திருப்பத்தூர்,தருமபுரி,சேலம்,நாமக்கல்,பெரம்பலூர்,கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,ஈரோடு,நீலகிரி,கோவை,திருப்பூர்,திண்டுக்கல்,தேனி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம். 
சென்னையை பொறுத்தவரை,வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக  38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியசாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

மழை

அத்துடன் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில்  மணிக்கு 40 முதல் 50 கிமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கர்நாடகா கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனா இப்பகுதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என  வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web