இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ.1லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது தவிர உதவி ஆணையர், இணை ஆணையருக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சூளை சொக்கவேல் சுப்பிரமணியர் கோயில் சொத்து வாடகை பாக்கியை வசூலிக்கவில்லை என்றும், தனி நபர்களுக்கு எதிரான நடவடிக்கையை விரைவுபடுத்துவதில் தாமதம் என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அறநிலையத்துறை ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதனை மீறியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதில், ‘‘நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரனுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ரூ.1 லட்சம் அபராதத்தினை அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் உதவி ஆணையர், இணை ஆணையர் ஆகியோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி அபராத தொகையை எதிர்வரும் 2 வாரங்களுக்குள் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அறநிலையத்துறை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் இணை ஆணையர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!