மின்சாரம் பாய்ந்து கணவன் மனைவி பரிதாப பலி!! நாமக்கலில் சோகம்!!

 
பரமசிவம்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த பாண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பரமசிவம் (62). இவரது மனைவி பழனியம்மாள் (55). இவர்கள் தங்களது வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் கொட்டகை அமைத்து, ஆடுகளை வளர்த்து வந்தனர். இந்த கொட்டகைக்கு வீட்டில் இருந்து தனி வயர் மூலம் மின்சாரம் எடுத்துள்ளனர். 

நீட் தேர்வில் முதலிடம்! நாமக்கல் மாவட்டம் அசத்தல்!

இந்த நிலையில் கடந்த 21-ம் தேதி இரவு, பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. இதையடுத்து, நேற்று காலையில் பழனியம்மாள் கொட்டகைக்குச் சென்ற போது, தரையில் அறுந்து விழுந்து கிடந்த மின்சார வயரை எடுத்துள்ளார். அப்போது, திடீரென்று அவர் உடல் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். 

அவருடைய அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த கணவர் பரமசிவம், மனைவியைக் காப்பாற்ற முயன்ற போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. அடுத்தடுத்து கணவன், மனைவியின் அலறல் சத்தம் கேட்டு பதற்றத்துடன் ஓடிவந்த பக்கத்து வீட்டு வாலிபர், அவர்களைக் காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததுள்ளது. இதில், லேசான காயத்துடன் அவர் உயிர் தப்பினார்.

மின்சாரம்

சுயநினைவின்றி கிடந்த பரமசிவம் மற்றும் அவரது மனைவி பழனியம்மாள் ஆகிய இருவரையும் மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரியவந்தது. லேசான காயம் அடைந்த பக்கத்து வீட்டு வாலிபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மின்சாரம் பாய்ந்து கணவன், மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web