கிரிக்கெட் பேட்டால் மனைவியை அடித்து கொலை செய்த கணவன்!! பகீர் பிண்ணனி!!

 
சேலம்


சேலம் ரெட்டிபட்டி பகுதியில் வசித்து வருபவர்  கீர்த்திராஜ், தனஸ்ரீயா தம்பதியர்களுக்கு,கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனிடையே கணவன்,மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.  இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனஸ்ரீயா பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

சேலம்

இந்நிலையில் நேற்று  சமாதானம் செய்து கணவர் கீர்த்திராஜ் தனது  வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இந்த நிலையில் இரவு தனஸ்ரீயா தற்கொலை செய்து கொண்டதாக பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் நேரில் சென்று பார்த்தபோது, தனஸ்ரீயா தலைப் பகுதி மற்றும் உடல் முழுவதும் ஆங்காங்கே காயங்கள் இருந்துள்ளது. இதுதொடர்பாக சூரமங்கலம் காவல் நிலையத்தில் பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த  காவல்துறையினர் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  

சேலம்

மேலும், பெண்ணின்  கணவர் கீர்த்திராஜ் மற்றும் அவரது பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திருமணமான நாளிலிருந்து வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்ததாகவும், திட்டமிட்டு தனது மகளை அழைத்துச் சென்று கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு நாடகமாடியதாகவும் பெண்ணின் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இளம்பெண்  மர்மமான முறையில் இறந்த விவகாரம் சேலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web