நா... ஆட்டோக்காரன்... நாலும் தெரிஞ்ச... உலகம் முழுக்க வைரலாகும் ஆட்டோ வாசம்!

 
ஆட்டோ

‘சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே’ , சாலையைப் பார்.. சேலையைப் பார்க்காதே.. என்று ரெடிமேட் டெம்ப்ளட்களில் ஆட்டோ வாசகங்கள் வேறு வேறு வடிவங்களில் இந்தியா முழுக்கவே இருக்கும். ஆட்டோக்களின் பின்னால் ‘பிரசவத்திற்கு இலவசம்’ என்று எழுதப்பட்டிருக்கும் வாசகங்களை நம்பி, கண்ணியமான ஓட்டுநர் என பெண்கள் ஆட்டோக்களில் பயணித்த காலங்கள் எல்லாம் இருந்தது. இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் எழுதி வைத்திருக்கும் வாசகம் உலகம் முழுக்கவே ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

மக்களின் மனநிலையையும், இயந்திர வாழ்க்கையையும் பிரதிபலிப்பதாகவும் இருக்கிறது அந்த வாசகம். போக்குவரத்து சிக்னலில் வரிசையில் வாகனங்கள் நின்று கொண்டிருக்கும் போது அனைவரும் தொடர்ந்து ஹார்ன் அடிப்பதை நாம் பார்த்து இருப்போம். அந்த இரைச்சலை கேட்டு நமது காதுகள் கிழிந்துவிடும் அளவுக்கு எரிச்சலை மூட்டுவது வாடிக்கை தான்.இப்படி பின்னால் நிற்கும் வாகனங்கள் தொடர்ந்து ஹார்ன் அடித்துக் கொண்டிருப்பவர்களின் கன்னத்தில் நன்றாக அறையும் படியான பதிவு ஒன்று ட்விட்டரில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. இதை பார்த்த பலர் நகைச்சுவையுடன் அதன் உள் அர்த்தத்தையும் கண்டு வியந்து வருகிறார்கள்.


பொதுவாக வாகனங்களில் பல வசனங்கள் பொறிக்கப்பட்டு இருக்கும். அதிலும் ஆட்டோக்கள் என்றால் தனி ரகம். ‘பிரசவத்திற்கு இலவசம்’ ‘தாய், தந்தை துணை’, ‘சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே’ போன்ற வசனங்கள் மிகவும் பிரபலமானவை.இப்படித்தான் டெல்லியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவில் ‘பின்னால் ஹார்ன் அடிப்பது வலிக்கிறது’ என்று தலைப்பிட்டு அதிகளவிலான ஒலியை எழுப்பும் வாகன ஓட்டிகளுக்கு புரிய வைத்துள்ளார்.

மேலும் அதற்கு கீழ், ‘‘டிராபிக்கில் வண்டிகள் வரிசையாக நிற்கும் போது தொடர்ந்து ஹார்ன் அடித்தால் என்ன நடக்கும்? என்று கேள்வி கேட்டு அதற்கு 4 தேர்வுகளையும் கொடுத்து இருக்கிறார். அதில் 1.சிக்னல் சீக்கிரத்தில் பச்சைக்கு மாறும், 2.சாலை தானாக விரிவடையும், 3.வாகனங்கள் எல்லாம் ரெக்கை முளைத்து பறக்கும், 4.எதுவும் நடக்காது’ என்று எழுதி இருக்கிறார்.

ஹெல்மெட் அணியாமல் ஆட்டோ ஓட்டியதாக ஓட்டுநருக்கு அபராதம்..!!
இதை பார்த்த வரதராஜன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆட்டோ வசனத்தை புகைப்படம் எடுத்து அதில், ‘புத்திசாலித்தனமான முன்னெடுப்பு என்று கேப்ஷனுடன் பதிவு செய்துள்ளார். இந்த பதிவை 4 ஆயரித்துக்கும் மேற்பட்டோர் பார்த்து லைக் செய்து ஷேர் செய்துள்ளனர். இந்த பதிவு பலரின் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

பின்னால் நிற்கும் வாகன ஓட்டிகள் அடிக்கும் ஹாரனை பார்த்தால், சிக்னலின் முன்னால் நிற்கும் நான் என்னவோ நடுரோட்டில் சமைத்துக் கொண்டு இருப்பதைப் போன்று உள்ளது’’ என்று ஒருவர் கூறிய நகைச்சுவை தற்போது நினைவுக்கு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web