நான் அவனில்லை பாணியில் 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த மோசடி மன்னன்!!

 
அரவிந்த்

சென்னை ஆவடி பகுதியைச் சேர்ந்த தீபா, வேலைக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் கன்சல்டன்சி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 6 ஆண்டிற்கு முன் திருமணமாகிய தீபா, தற்போது கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்று தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், தீபாவின் உறவினர்கள் மேட்ரிமோனி மூலம் அவருக்கு வரன் பார்த்து வந்த நிலையில், சென்னை ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த அரவிந்த் அறிமுகமாகியுள்ளார். இவர் தீபாவிடம் தான் துபாயில் பணிபுரிந்து வருவதாகவும், தனக்கும் விவாகரத்து ஆனதாகவும் நல்ல வரனை பார்த்து வருவதாகவும் கூறியுள்ளார்.

அரவிந்த்

இதனை நம்பிய தீபா, அரவிந்தை நேரில் சந்தித்து திருமணம் தொடர்பாக பேசியதோடு, அவரை திருமணம் செய்வதாக ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து, இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் தனிமையில் இருக்கும் உனக்கு கைகள் மற்றும் பணம் இருப்பது பாதுகாப்பு இல்லை. அதனால் தன்னிடம் தந்துவிடுமாறு கூறியுள்ளார். அதனை நம்பிய தீபா தன்னிடம் இருந்த 50 சவரன் நகை மற்றும் பணத்தை அரவிந்தனிடம் கொடுத்துள்ளார்.

இதன்பின், தீபாவால் அரவிந்தனை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த தீபா, திநகர் பகுதியில் வசித்து வந்த அரவிந்தன் விசித்து வந்த வீட்டின் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார. அப்போது, இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இங்கு குடும்பத்துடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தீபா சென்னை பாண்டி பஜார் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், மேட்ரிமோனியில் விவாகரத்து ஆன பெண்கள், கணவர் இல்லாமல் இருக்கும் பெண்களை குறிவைத்து திருமணம் செய்வதாகக் கூறி நகை மற்றும் பணம் மோசடி செய்து அதன்பின் தலைமறைவாகிவிடுவார் என்பதும், இதுபோன்று சென்னை தேனாம்பேட்டையில் அவர் மீது பல பெண்கள் புகார் அளித்திருப்பதும் தெரியவந்துள்ளது. 

கைது

மேலும், திநகரில் குடும்பம் நடத்திய பெண்ணிடம் கூட இதுபோன்று ஏமாற்றி திருமணம் செய்தது என்பதும் தெரியவந்துள்ளது. அந்தப் பெண்ணும் அரவிந்த் மோசடி பேர்வழி என்று தெரிந்தபின் அவர் மீது புகார் அளித்துள்ளார். இதுபோன்று சென்னையில் மட்டும் நான்கிற்கும் மேற்பட்ட பெண்கள் அரவிந்தால் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அரவிந்தை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web