காதலிக்கலைன்னா கொன்னுடுவேன்! தாய் கண் முன்பே மாணவியை மிரட்டிய சைக்கோ காதலன்!

 
காதல்

சென்னையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலைச் செய்யப்பட்டது மட்டுமல்லாமல் நேற்றைய முன் தினம் சத்யா பரங்கிமலை ரயில் நிலையத்தில் கொல்லப்பட்டது வரை, வெளியே தெரிந்த காதல் கொலைகள் சொற்பம் தான் என்கிறார்கள் க்ரைம் பீட் செய்திகளைப் பார்க்கும் பத்திரிக்கையாளர்கள். பல தற்கொலைகளுக்கு உண்மையான காரணங்கள் வெளியே தெரியாது. தற்கொலைச் செய்து கொள்பவர்களே கூட, காரணத்தைச் சொல்லி, குடும்பத்தை சங்கடப்படுத்த விரும்புவதில்லை.

குறிப்பாக சென்னையில், ஒரு பெண், பொது போக்குவரத்து பயன்படுத்தி கல்லூரி சென்று மூன்று வருடங்கள் வீடு திரும்புவது எல்லாம் அத்தனை இலகுவான விஷயங்கள் கிடையாது. பேராசிரியர்கள், பேராசிரியைகள் என யாரையுமே நம்ப முடியாத சூழலில், நெருங்கிய தோழிகளே கூட பாத்ரூமில் கேமிரா வைத்து, படம்பிடித்து காதலனுக்கு நிர்வாண வீடியோக்களை அனுப்பிய உதாரணங்களைப் பார்த்திருக்கிறோம்.

ள் ரூபத்திலும் காதலிக்கலைன்னா... கொன்னுடுவேன்.. உன் கழுத்துல நான் மட்டும் தான் தாலி கட்டுவேன். எழுதி வெச்சுக்கோ.. என்று கல்லூரி மாணவியை பட்டப்பகலில் வீடு புகுந்து, தாயின் கண் முன்பாகவே மிரட்டி விட்டு சென்றிருக்கிறார் ரஷீத் என்கிற வாலிபர். சினிமாக்களில் வரும் ரவுடிசத்தை நேரில் பார்த்த அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள் தாயும் மகளும். சென்னை சூளைமேடு பகுதியில் வசித்து வருபவர் சித்ரா. . இவர் அக்கம் பக்கத்து வீடுகளில் வீட்டு வேலை செய்து  வந்தார். இவருடைய  மகள் 18 வயது கவிதா . கல்லூரியில் படித்து வரும் கவிதாவை அதே பகுதியில் வசித்து வரும் 28 வயதான  ரஷீத் காதலிப்பதாக கூறியுள்ளார்.  ஆனால் அவரது காதலை கவிதா ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. 

ரஷீத்

இந்நிலையில், அக்டோபர் 13ம் தேதி நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சித்ராவும், கவிதாவும் வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது ரஷீத் வீட்டிற்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். கவிதாவை காதலிக்கிறேன். எனது காதலை கவிதா ஏற்க மறுத்து வருகிறார். பைத்தியம் போல, கவிதா பின்னால் சுற்றி வருகிறேன். கவிதா இல்லாமல் எனக்கு வாழ்க்கை இல்லை. எனவே எனக்கு கவிதாவை திருமணம் செய்து தரவேண்டும், என்று ரஷீத் கூச்சல் போட்டுள்ளார். 

இதற்கு சித்ராவும், கவிதாவும் மறுப்பு தெரிவித்தனர். உடனே வாலிபர் ரஷீத் அவர்கள் மீது பாய்ந்து தாக்க முற்பட்டார். பயத்தில் கவிதாவும், சித்ராவும் கூச்சல் போட்டனர். உடனே அங்கிருந்து வெளியேறிய ரஷீத், என்னைக்கு இருந்தாலும், நான்தான் கவிதா கழுத்தில் தாலி கட்டுவேன், இல்லாவிட்டால், கொலை விழும், என்று மிரட்டல் விடுத்து விட்டு சென்றுள்ளார். 

சிறை

இது குறித்து சித்ரா சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சைக்கோ போல மிரட்டிவிட்டு சென்ற வாலிபர் ரஷீத் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் 

From around the web