ஐ யம் பேக்! இந்தியா திரும்புகிறார் நித்தியானந்தா! வைரலாகும் வீடியோ!

 
நித்தியானந்தா

கொஞ்சமாகவா ஆடுனாரு? என்று கேலி பேச்சும், கிண்டலுமாக மீம்ஸ்கள் நித்தியானந்தா குறித்து வேகமாக பகிரப் படுகின்றன. மொத்த உலகமும் கொரோனா ஊரடங்கு என்று உயிர் பயத்தில் வீட்டிற்குள் முடங்கி கிடந்த போதும் கூட, அழகழகான பொண்ணுங்களுடன் செல்ஃபி எடுத்து ஷேர் செய்து இளைஞர்களின் சாபத்தை வாங்கிக் கொண்டார் என்று ஒவ்வொரு வீடியோக்களுக்குமே கமெண்ட்ஸ்கள் குவிகின்றன. நித்தியானந்தாவின் நிலை அத்தனை மோசம் என்கிறார்கள். சென்னை பெங்களூரு அருகே பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த நித்யானந்தா, பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்துள்ளதாகவும், அவர்களுக்கு பாலியல் ரீதியில் தொல்லைகள் தந்ததாகவும் குற்றச்சாட்டுகளில் சிக்கினார். நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையறையில் நித்தியானந்தா இருக்கும் வீடியோ வெளியானதும், இருவரும் தலைமறைவானார்கள். தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அதிலிருந்து தப்பிக்கும் வகையில் சாமியார் நித்யானந்தா, 2019ம் ஆண்டு இந்தியாவில் இருந்து தலைமறைவானார். இந்துக்களுக்கு என தனி கைலாசா நாடு ஒன்றை உருவாக்கிவிட்டதாக பிரகடனபடுத்தி செய்திக்குறிப்பு ஒன்றை ஆன்லைன் மூலம் வெளியிட்டார். 

அவ்வப்போது பக்தர்களுக்கு சத்சங்கம் என்ற பெயரில் ஆன்மிக சொற்பொழிவுகளை சமூக வலைதளங்களின் வாயிலாக ஆற்றி வந்த அவர், கடந்த இரு வாரங்களாக செயல்படாமல் இருந்தார். இதனால் அவருக்கு கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், சிலர் அவர் மரணமடைந்து விட்டதாகவும் பீதி கிளப்பி வந்தனர். அவற்றிற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அவரே கைப்பட எழுதிய கடிதம் ஒன்றினை வெளியிட்டார்.

நித்தியானந்தா

இந்நிலையில் தற்போது நித்தியானந்தா கோமா நிலைக்கு சென்று இருப்பதாகவும் செயற்கை சுவாசம் உள்ளிட்ட சிகிச்சைகள் அவருக்கு வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் பல இடங்களில் வலம் வந்த நித்தியானந்தா தற்போது ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள தீவில் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய உணவு முறைகளுக்கு பழக்கப்பட்ட அவர் தற்போது அவ்வகை உணவுகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகவும் சுற்றிலும் கடல் இருப்பதால் உப்புக்காற்று அவரது உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை.

உடல் மெலிந்து சோர்வான நித்திக்கு கல்லீரல் அலர்ஜீயும், சிறுநீரக தொந்தரவும் ஏற்பட்டுள்ளது. போக போக நுரையிரல் தொற்றுவரை சென்று தற்போது மூச்சு விட முடியாமல் ஆக்சிஜன் உதவியுடன் இருந்து வருகின்றார்.இந்த நிலையில், மீண்டும் அவர் இறந்து விட்டதாக செய்தி சில நாட்களாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதுகுறித்து நித்யானந்தா வெளியிட்ட பதிவில் பதில் அளித்துள்ளார். 

நித்தியானந்தா

அதில், “பரமசிவனின் ஆசிகள். அன்புள்ள பக்தர்கள் மற்றும் அன்பான சீடர்கள், கைலாசாவாசிகள் நான் தற்போது வரை ஆழ்ந்த சமாதி நிலையை மகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டிருக்கிறேன். மேலும் உங்கள் அனைவரையும் உள் இடத்தில் இணைக்கிறேன். மிக விரைவில் உடலில் குடியேறி வழக்கமான சத்சங்கங்களை மேற்கொள்வேன். மேலும், உயர்ந்த கொள்கைகள் மற்றும் மகா கைலாசாவின் அசாதரணமான ஆற்றலைப் பகிர்ந்து கொள்வேன்” என்று கூறியுள்ளார்.

நித்தியானந்தாவின் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். உடல் தளர்ந்து விட்டதாகவும், இனி இந்திய உணவு உட்கொண்டால் மட்டுமே நித்தியானந்தா பிழைக்க முடியும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நித்யானந்தா மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக இந்தியா திரும்ப உள்ளதாகவும், இம்மாத இறுதிக்குள் நித்யானந்தா திருவண்ணாமலைக்கு வந்து சேருவார் என்றும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web