அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! தமிழக அரசுஅதிரடி!!
தமிழகத்தில் அரசு அலுவலர்களுக்கு பல சலுகைகளை தமிழக அரசு சமீபமாக அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது நடைமுறையில் உள்ள பணி ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்றம் செய்வதில் அதிக காலதாமதம் ஏற்படுவதாக பலவிதமான புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன.
இந்த குறைகளை களையும் வகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி குடும்ப ஓய்வூதியம் கோரும் நேர்வுகளில் கணவன் மற்றும் மனைவி இறப்பு சான்றிதழ் மட்டுமே சமர்ப்பித்தால் போதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் இனிவரும் காலங்களில் புதிய ஓய்வூதியதாரர்களுக்கு,ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை தளத்தில் கணவன் அல்லது மனைவியின் அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்பட வேண்டும்.இனி ,குடும்ப ஓய்வூதியம் கோரும் நேர்வுகளில் அவர்கள் கணவன் அல்லது மனைவியின் இறப்புச் சான்றிதழ் மட்டும் சமர்ப்பிக்கப்பட்டால் உடனடியாக அதற்குரிய செயல்பாடுகள் தொடங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!