முடியல.........!! இரவோடு இரவாக டூவீலரையும் சேர்த்து ரோடு போட்ட காண்ட்ராக்டர்!!

 
டூவீலர்


வேலூரில் தெருவில் நிறுத்தி வைத்த இருசக்கர வாகனத்தோடு சேர்ந்து சிமெண்ட் சாலை போடாப்பட்டதால் வாகனத்தை எடுக்க முடியாமல் உரிமையாளர்கள் அவதியுற்றனர்.வேலூர் மாநகராட்சி சீர்மிகு நகராக தேர்வு செய்யப்பட்டுபல்வேறு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வேலூர் மெயின் பஜார் காளிகாம்பாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவா. இவரது இருசக்கர வாகனத்தை நேற்று இரவு வழக்கம் போல் தங்களது கடைமுன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். காலை எழுந்து வந்து பார்த்த போது தெருவில் புதியதாக சிமெண்ட் சாலை போடப்பட்டிருந்தது.

டூவீலர்

அத்தோடு சேர்ந்து தெருவோரம் நிற்க்க வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை சேர்த்தும் சாலை போடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ந்து போய் வாகனத்தை எடுக்க முயற்ச்சித்துள்ளார். ஆனால் சிமெண்ட் கலவை இருகிவிட்டதால் வாகனத்தை எடுக்கமுடியவில்லை.  பின்னர் போராடி உடைத்து வண்டியை மீட்டுள்ளனர். 
 இது குறித்து அப்பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவர் கூறுகையில், இது என்னோட தம்பி வண்டி தான் என்றும், நேற்று இரவு 11.00 மணிவரை கடையில் தான் இருந்தோம் அதுவரை சாலை போடவுள்ளதாக எந்த அறிவிப்பும் வழங்கவில்லை என்றும், மாறாக இரவோடு இரவாக சாலை போட்டுள்ளனர்.

வேலூர்

அப்போது எங்களது வண்டிக்கும் சேர்த்தே சாலை போட்டுள்ளனர். ஒரு வேலை மனிதன் உறங்கிக்கொண்டிருந்தால் கூட அவனுக்கும் சேர்த்தே சாலை போட்டிருப்பார்கள் போல என்றும், இது குறித்து ஒப்பந்ததாரர்களிடம் கேட்டால் அலட்சியமாக பதில் கூறுவதாக வேதனை தெரிவித்தார்.. மேலும், எங்கள் பகுதியில் போடப்பட்டு வரும் சாலை சுத்தமாக தரம் இல்லாமல் கடமைக்கு போடப்பட்டு வருகிறது என்றும், தெருவில் உள்ள குப்பை, கற்கள், கட்டைகள் என எதையும் அகற்றாமல் சாலை போடுகிறார்கள் இதனால் மக்கள் பணம் தான் வீணாகிறது என கூறிய அவர், இனியாவது அதிகாரிகள் இவற்றை கண்காணித்து தரமான சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web