20க்கும் மேற்பட்ட ஆர்த்தி ஸ்கேன் சென்டர்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!!
தமிழகத்தில் சென்னையில் 2000ம் ஆண்டும் ஆர்த்தி ஸ்கேன் செண்டர் தொடங்கப்பட்டது படிப்படியாக தமிழகம் முழுவதும் பல்வேறு கிளைகளை திறந்துள்ளது. ஸ்கேன் செண்டர்களில் முண்ணனியில் இருந்து வருகிறது. இந்த ஸ்கேன் செண்டர்கள் மூலம் பல்வேறு விதமான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இன்று காலை முதல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள ஆர்த்தி ஸ்கேன் சென்டர் மையங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக சென்னையில் உள்ள வடபழனி, மடிப்பாக்கம், ராயப்பேட்டை உள்ளிட்ட ஆர்த்தி ஸ்கேன் சென்டர்களின் கிளைகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த திடீர் சோதனை, தமிழ்நாடு முழுவதும் சுமார் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஆர்த்தி ஸ்கேன் சென்டர்களில் பணியாற்றும் மருத்துவர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு டாட்டா கேப்பிட்டல் குரூப் ஆர்த்தி ஸ்கேன் சென்டரில் பெரிய தொகையை முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!