போதையில் நண்பர்களே கிணற்றில் தள்ளி கொலை செய்த கொடூரம்!! 11ம் வகுப்பு மாணவன் பலி!!

 
ஸ்டீபன்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ஸ்டீபன். இவருக்கு 16 வயதில் ஒரு மகன் இருந்தார். அப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். 12ம் வகுப்புக்கு செல்ல வேண்டி காத்திருந்த நிலையில், கடந்த 18ம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றவர் திடீரென காணாமல் போனார். இதனால் ஸ்டீபன் அதிர்ச்சியடைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் மகன் கிடைக்காததால், உத்தமபாளையம் காவல்நிலையத்தில் தந்தை புகார் அளித்தார்.

காதலியுடன் பேசிக்கொண்டே கிணற்றில் குதித்த காதலன்!!

வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினார்கள். அப்போது கடந்த 20ம் தேதி ஸ்டீபன் வீட்டின் அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் மாணவனின் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கிணற்றில் இறந்து கிடப்பது காணாமல் போன மாணவன் என்பதை கண்டறிந்தனர். இதனால் மகனை இழந்த ஸ்டீபன் அழுது துடித்தார். மேலும் தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசார் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்கு சந்தேக வழக்காக மாற்றி பதிவு செய்யப்பட்டது. பின்னர் உயிரிழந்த மாணவனின் செல்போன் எண்ணில் கடைசியாக தொடர்பு கொண்டவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டார்கள். அதில் உயிரிழந்த மாணவனை 17 வயது சிறுவர்கள் 2 பேர் கடைசியாக தொடர்பு கொண்டு பேசியது தெரிய வந்தது. போலீசார் மேற்கொண்ட கிடுக்குப்பிடி விசாரணையில், மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த அல்லா என்ற 22 வயதான வாலிபர் ஆகிய 3 பேரும், கடந்த 18ம் தேதி மாலை ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அங்கு வந்த சிறுவனிடம் 1,000 ரூபாய் கொடுத்து உணவு வாங்கி வருமாறு கூறியுள்ளனர். பின்னர் மாணவனிடம் பணத்திற்கு கணக்கு கேட்ட போது, மாணவனுக்கும் 3 பேருக்கும் இடையில் வாக்குவாதம் எழுந்துள்ளது. இதனால் மதுபோதையில் இருந்த 3 பேரும் மாணவனை சரமாரியாக தாக்கி கிணற்றில் வீசி கொலை செய்தததாக திடுக்கிடும் வாக்குமூலம் அளித்தனர்.

அழுகிய நிலையில் 15 வயது சிறுமியின் சடலம்- கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

தலைமறைவான தலைமறைவாக இருந்த அல்லா பிச்சை மதுரையில் வைத்து போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 சிறுவர்கள், அல்லா பிச்சை ஆகிய 3 பேரையும் உத்தமபாளையம் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இதைத்தொடர்ந்து அல்லா பிச்சை தேனி மாவட்ட சிறையிலும், சிறுவர்கள் 2 பேர்  மதுரையில் உள்ள சிறார் சீர்திருத்த மையத்திலும் அடைக்கப்பட்டனர். மது போதையில் 11ம் வகுப்பு மாணவன் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web