கார்த்தி சிதம்பரம் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

 
நகர் பகுதிகளில் இருந்து ஊரகப் பகுதிகளுக்கு கொரோனாவை விரைவாக பரப்பும் – கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம், திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிவகங்கை தொகுதி எம்.பி.யாக உள்ளார். சமீப காலமாக உடல்நலக் குறைவால் கார்த்தி சிதம்பரம் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

கார்த்தி சிதம்பரம்

இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். கார்த்தி சிதம்பரத்தின் உடலில் ஏற்பட்டுள்ள கட்டியை அகற்றுவதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறப்படுகிறது. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும், உடன் குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்து வருகின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கார்த்தி

கடந்த 9ம் தேதி சீன நாட்டினர்களுக்கு விசா வழங்குவதில் லஞ்சம் வாங்கியதாக கார்த்தி சிதம்பரத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள் கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் 2வது முறையாக அதிரடியாக சோதனை நடத்தினார்கள். டெல்லியில் இருந்து வந்த 7 அதிகாரிகள் கார்த்தி சிதம்பரத்தில் வீட்டில் பூட்டி இருந்த அறையை திறந்து சோதனை நடத்தினார்கள்.

பெரும் அரசியல் பரபரப்புக்கு இடையில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் தற்போது கார்த்தி சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web