தமிழகத்தில் தொடரும் லாக்கப் மரணங்கள்!! மேலும் ஒரு விசாரணை கைதி உயிரிழப்பு!!

 
சிவசுப்பிரமணியன்

தமிழகத்தில் சமீபகாலமாக விசாரணைக்கு வரும் கைதிகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். இச்சம்பவங்களால் மக்களிடையே காவல்துறை குறித்த அச்சமும் , அதிர்ச்சியும் அதிகரித்து வருகிறது.  ஏப்ரல் மாதம் 19-ம் தேதி விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும், பேசு பொருளாகவும் மாறியது.

கைதி விக்னேஷ்

இந்த சம்பவம் நடந்த சுவடு அழிவதற்குள் நேற்று சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில், விசாரணை கைதி ராஜசேகர் என்பவர் மர்ம மான முறையில் உயிரிழந்தார். இந்நிலையில், மேலும் ஒருவர் உடல் நிலை பாதித்து உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி அருகே உள்ள கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்சனையில், பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் சிவசுப்பிரமணியனை திட்டச்சேரி போலீசார் கைது செய்தனர். 

சிவசுப்பிரமணியன்

அதனைத்தொடர்ந்து, நாகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பட்ட சிவசுப்பிரமணியனை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, நாகை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிவசுப்பிரமணியனுக்கு கடந்த 10-ம் திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து உடனடியாக நாகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிவசுப்பிரமணியனை போலீசார் அனுமதித்துள்ளனர். இந்நிலையில், சிவசுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மாவட்ட சிறை கண்காணிப்பாளர் அளித்த புகாரின் பேரில் வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web