3 நாட்களாக பூட்டிய வீட்டுக்குள் மாந்திரீக பூஜை!! நரபலியா?! பரபரப்பு!!

 
மாந்த்ரீகம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தசராப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தவமணி (55). நெசவு தொழிலாளியான இவருக்கு காமாட்சி என்ற மனைவியும், பூபாலன், பாலாஜி ஆகிய 2 மகன்களும், கோமதி என்ற மகளும் உள்ளனர். இதில் பூபாலனுக்கு ராமநாதபுரம் மாவட்டம் பகுதியை சேர்ந்த காளிப்பிரியா என்பவருடன் காதல் திருமணம் செய்துகொண்டு  இருவரும் சென்னையில் காவலராக பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோமதி என்பவருக்கும் அரியப்பாடி கிராமத்தை சேர்ந்த மின்சாரதுறை பணியாளர் பிரகாஷ் என்பவருக்கும் கடந்த 6 மாதம் முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது கோமதி என்பவருக்கு பேய் பிடித்திருப்பதாகவும் இதனால் காளியம்மன் சிறப்பு மாந்தரீகம் பூஜையை செய்ய தவமணி உள்ளிட்ட ஓரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கடந்த 3 நாட்களாக வீட்டை பூட்டி கொண்டு மாந்தரீகம் செய்து கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

மாந்த்ரீகம்

இந்த நிலையில் நேற்று காலை முதல் கதவை திறக்காமல் மந்திரம் மட்டும் ஓதிக்கொண்டு இருப்பதாக அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தாசில்தார் ஆர்.ஜெகதீசன், போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் வந்து வீட்டுக்குள் இருந்தவர்களை வெளியே வரும்படி கூறினார்கள். 

அதற்கு அவர்கள் நாங்கள் மாந்திரீகம் செய்கிறோம். எங்கள் பூஜையை தடை செய்ய வேண்டாம். நீங்கள் வெளியே செல்லுங்கள் என குரல் கொடுத்தனர். சுமார் 5 மணி நேரம் போராடியும் அவர்கள் வீட்டுக்குள் இருந்து வெளியே வராமல் இருந்தனர்.

இதனையடுத்து ஜே.சி.பி இயந்திரம் மூலம் வீட்டின் முன்பக்க கதவை உடைத்துஉள்ளே சென்று 6 பேரையும் ஆரணி தாலுக்கா போலீசார் அதிரடியாக மீட்டனர். இதனை தொடர்ந்து எங்கள் குடும்பத்திற்கு மாந்தரீகம் யாரோ வைத்துள்ளதாகவும் இதனால் பூஜை செய்து எடுக்க போவதாகவும் கூறினார்கள். பின்னர் மீட்க வந்த போலீசாரை தவமணி குடும்பத்தினர் தாக்க முயன்றனர்.  

மாந்த்ரீகம்

வீட்டு கதவை உடைத்து, 6 பேரையும் போலீசார் மீட்டபோது, அவர்கள் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் போல் நடந்து கொண்டனர். அவர்களை ஆரணி அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். ஆரணி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர். நரபலி கொடுப்பதாக  காட்டு தீ போல்  தகவல் பரவியதால் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் 

From around the web