பதிவுத்துறையில் முக்கிய மாற்றம்!! சென்னை, மதுரை மண்டலங்கள் பிரிப்பு!!

 
பதிவுத்துறை

தமிழகத்தில் மொத்தம் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. 55 மாவட்ட பதிவாளர் அலுவலங்களின் வாயிலாக இதன் பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு அடுத்தபடியாக சென்னை, வேலூர், கடலூர், சேலம், திருச்சி, தஞ்சை, கோவை, மதுரை, திருநெல்வேலி என மொத்தம் 9 மண்டலங்கள் இயங்கி வருகின்றன. டி.ஜ.ஜி.க்கள் இந்த மண்டலங்களின் அலுவலகங்களை நிர்வகித்து வருகிறார்கள்.

ப்த்திரம்
அதிகபட்சமாக சென்னை மண்டலத்தின் மூலம் 40 சதவீத வருவாய் பதிவுத்துறைக்கு செல்கிறது. நாளுக்கு நாள் பத்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அலுவல் பணிகள் அதிகரித்து வருகின்றன. இதனால் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதனால் புதிய மண்டலங்கள் உருவாக்கப்படுவது குறித்து  ஆலோசிக்கப்பட்டு வந்தது. 

தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘சென்னை மண்டலத்தில் வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் என 5 பதிவு மாவட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனை சென்னை வடக்கு, சென்னை தெற்கு என இரண்டாக பிரிப்பதன் மூலம் புதிய மண்டலங்கள் உருவாக்கப்பட உள்ளன.

அதேபோல மதுரை வடக்கு, மதுரை தெற்கு, திண்டுக்கல், பழனி, பெரியகுளம், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், காரைக்குடி உள்ளிட்ட பதிவு மாவட்டங்களில் மதுரை மண்டலத்தில் இயங்கி வருகின்றன.  இதனையும் இரண்டாக பிரித்து புதிய மண்டலம் உருவாக்குவது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவு

இதற்கான கொள்கை அளவில் தமிழக அரசு ஒப்புதல் அளிககும் பட்சத்தில், எந்தெந்த பதிவு மாவட்டங்கள், எந்த மண்டலத்திற்குள் கொண்டு வரப்படும் என்பதற்கான வரையறைகள் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான வரைவு திட்டம் உருவாக்கப்பட்டு சார் பதிவாளர் வளாகத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படாத வண்ணம் வடிவமைக்கப்படும். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் மக்களின் கால நேரம் வீணாகாமல் பாதுகாக்கப்படும் என்று பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அலுவலர்களுக்கும் பணிச்சுமை குறையும் என்பதால் அனைவர் மத்தியிலும் புதிய மண்டலத்திற்கான அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web