ஒரே நேரத்தில் 2 காதலிகளுடன் திருமணம் !! காத்துவாக்குல 2 காதல்!!

 
காத்து வாக்குல 2 காதல்

ஜார்க்கண்ட் மாநிலம் பாண்டா கிராமத்தில் வசித்து வருபவர்  சந்தீப் ஓரான் . இவர்  அதே பகுதியை சேர்ந்த குசும் லக்ரா என்ற பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளாமலேயே கடந்த  3 வருடங்களாக குடும்பம் நடத்தி வந்தனர்.  இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தையும் உள்ளது. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் மேற்கு வங்காளத்தில் உள்ள செங்கல் சூளைக்கு பணிக்கு சென்றார். அங்கேயெ  பணிபுரியும் சுவாதி குமாரி என்ற பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.

திருமணம்

இவர்களது  காதல்  சந்தீப் மற்றும் குசும் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. , 2 பெண்களும் முதலில் எதிர்த்தாலும்  சந்தீப் இருவரையும்  சமாதானம் செய்து வைத்தார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர்  2 பெண்களையும் சந்தீப்பிற்கு  திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கிராமத்தையே எதிர்த்து சந்தீப் தனது காதலிகள் இருவரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார்.  இது குறித்து சந்திப் கூறுகையில், "2 பெண்களை திருமணம் செய்து கொள்வதில் சட்ட சிக்கல் இருக்கலாம். ஆனால் இவர்களில் ஒருவரை கூட விட்டு பிரிய முடியாது" எனக் கூறியுள்ளார் .

காத்து வாக்குல ரெண்டு காதல்

 சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இதில், இரண்டு பெண்கள் ஹீரோவை காதலிப்பார்கள். ஹீரோவும் இருவரையும் காதலிப்பார். ஒருவரை விட்டு இன்னொருவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என  பிடிவாதமாக இருப்பார். இரு பெண்களை ஒரே சமயத்தில் காதலிப்பது தவறு என உணர்ந்த பின்  ஹீரோ, இருவரையும் விட்டு பிரிந்து செல்வார். ஆனால் தற்போது நிஜத்தில்  இரண்டு பெண்களும் காதலித்த நபரையே  திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web