களரி பயிற்சி கற்றுக் கொடுத்த போது மயங்கி விழுந்து மாஸ்டர் பலி!! சென்னையில் சோகம்!!
மயிலாப்பூரில் வசித்து வருபவர் 29 வயது கிரிதரன் . இவர் சென்னை ஆலப்பாக்கம் பகுதியில் களரி பயிற்சி மையம் நடத்தி வந்தார். இவரது பயிற்சி மையத்தில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர் நேரடியாகவும், யூடியூப் சேனல் மூலமாகவும் மாணவர்களுக்கு களரி பயிற்சி அளித்து வந்தார்.
இந்நிலையில், யூடியூப் சேனலில் களரி பயிற்சியை பதிவு செய்து வெளியிட முடிவு செய்தார். அதன்படி கிரிதரன் நேற்று முன்தினம் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு களரி பயிற்சி அளித்து கொண்டிருந்தபோது திடீரென வாந்தி எடுத்தபடி மயங்கி விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயிற்சி மைய நிர்வாகிகள், சிகிச்சைக்காக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போலீசார், கிரிதரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கிரதரன் நெஞ்சுவலியால் உயிரிழந்தாரா அல்லது வேறு காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.களரி பயிற்சி அளித்த மாஸ்டர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!