200க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள்! 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை! வசமாக சிக்கிய தமிழாசிரியர்!

 
பாலியல் வன்கொடுமை

வேலியே பயிரை மேய்ந்த கதையாக, பள்ளி ஆசிரியரே, மாணவிகளுக்கு பாதுகாப்பாக இருக்காமல், மிரட்டி தன்னுடைய காம இச்சைக்கு அவர்களின் எதிர்கால வாழ்க்கையைப் பாழ்படுத்திய செய்தி கரூர் மாவட்டத்தையே கதி கலங்க செய்துள்ளது. தமிழாசிரியர் ஒருவரின் செல்போனில், நூற்றுக்கணக்கில் மாணவிகளின் வீடியோக்கள், புகைப்படங்களைக் கண்டு போலீசார் அதிர்ந்தனர். தமிழாசிரியரான அவர், தனது வகுப்பில் படிக்கும் மாணவிகளுக்கு, தேர்வுக்கு அனுப்பாமல் பெயில் ஆக்கிவிடுவேன் என மிரட்டி, பாலியல் இச்சைகளுக்கு கடந்த 4 மாதங்களாக பணிய வைத்த கொடுமையும் நிகழ்ந்துள்ளது. தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர், 10ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கொதித்தெழுந்த பெற்றோரால் கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே சேங்கல் பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த சுமார் 500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அதே பள்ளியில் நிலஒளி (வயது 40) என்பவர் 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தனது வகுப்பில் படிக்கும் 10ம் மாணவிக்கு ஆசிரியர் நிலஒளி கடந்த 4 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. 

கரூர்

மேலும் ஆசிரியர் நில ஒளி, பாதிக்கப்பட்ட மாணவியிடம், தனது ஆசைக்கு இணங்காவிட்டால், இறுதி தேர்விற்கு அனுப்ப மாட்டேன் என்றும் மிரட்டி பணிய வைத்திருக்கிறார். தேர்ச்சி பெறாதபடி உன்னை பெயில் ஆக்கிவிடுவேன் என்று மிரட்டி உள்ளார். மேலும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியும் கடந்த 4 மாதங்களாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
 
ஆசிரியரின் செல்போனில் மாணவி தன்னைத் தானே ஆபாசமாக வீடியோ எடுத்து அனுப்பும் படியும் மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 4 மாதங்களாக மகளிடம் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டதைக் கண்டு, மாணவியின் பெற்றோர் தொடர்ந்து விசாரணை நடத்தினர். மேலும் மாணவியின் செல்போனை வாங்கி ஆராய்ந்து பார்த்ததில், ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததை அறிந்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் கொதித்தெழுந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர் நிலஒளியை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.  இது குறித்து தகவல் அறிந்த மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரிடம் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

செக்ஸ் பாலியல் க்ரைம் ஆபாசம் கற்பழிப்பு

4 மணி நேரத்திற்கும் மேலாக ஆசிரியர் நிலஒளியை சிறை பிடித்து வைத்திருந்த மாணவியின் குடும்பத்தினர், பள்ளியில் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் பள்ளி நிர்வாகம் சார்பில் யாரும் எட்டிக்கூட பார்க்காததால், போராட்டம் சாலை மறியல் வரை சென்று பெரிதாகி விட்டது.  மாணவியின் உறவினர்கள் கூறுகையில், ‘‘ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும், பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்து பள்ளியை இழுத்து மூட வேண்டும்’’ என்று கூறப்பட்டது. 

போராட்டம் அதிகரிப்பதை அறிந்த போலீசாருட்ன கூடுதலாக லாலாபேட்டை காவல் ஆய்வாளர் ஜோதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றச்சாட்டு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்த பிறகு ஆசிரியர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். 

பின்னர் ஆசிரியர் நிலஒளியை கைது செய்து, அவரிடம் இருந்த 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். அவற்றை ஆராய்ந்து பார்த்ததில், இந்த மாணவியையும் சேர்த்து மொத்தம் 200க்கும் மேற்பட்ட பெண்களின் போட்டோக்கள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் பள்ளி ஆசிரியர் 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web