குறைப் பிரசவத்தில் தாயும், குழந்தையும் உயிரிழப்பு!! தொடரும் அவலம்!!

 
காஞ்சனா

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த ஜார்தான் கொல்லை ஊராட்சிக்குட்பட்ட எலந்தம்புதூர் கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தன்&ஜீவா தம்பதி. இவர்களின் மூத்த மகள் காஞ்சனா (22) என்பவருக்கும், பீஞ்சமந்தை கிராமத்தைச் சேர்ந்த குள்ளையன் (28) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இதைத்தொடர்ந்து காஞ்சனா 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

பரபரப்பு! விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ்! நிறைமாத கர்ப்பிணி உட்பட 3 பேர் பலி!
இந்நிலையில் காஞ்சனாவிற்கு நேற்று (20ம் தேதி) அதிகாலை திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. காஞ்சனாவின் கணவன் வெளியூர் சென்றுவிட்டதால், உறவினர்கள் அவரை பைக்கில் அழைத்து செல்ல முயற்சித்தனர். அப்போது திடீரென்று காஞ்சனாவிற்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதைத்தொடர்ந்து அதிக ரத்தபோக்கு ஏற்பட்டதால் காஞ்சனாவும் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், சோகமும் ஏற்பட்டுள்ளது.

அரசு பேருந்தில் மோதிய லாரி! உடல் நசுங்கி பயணிகள் பரிதாப உயிரிழப்பு!

இது குறித்து தகவல் அறிந்த அணைகட்டு வட்டார மருத்துவ அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் 2 பேரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப முயற்சித்தனர். ஆனால் சாலை வசதி செய்து தருவோம் என்று ஆட்சியரும், தாசில்தாரும் உறுதி அளித்தால் தான் சடலத்தை ஒப்படைப்போம் என்று கிராம மக்கள் வாக்குவாதம் செய்தனர். இந்த சம்பவம் குறித்து தற்போது போலீசாரும், வருவாய் துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள். சாலை போக்குவரத்து சரி இல்லாததால் காஞ்சனாவும் அவரது 6 மாத சிசுவும் இறந்துள்ளது என்று கிராம மக்கள் குற்றம் சாட்டி, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web