துண்டு துண்டாக வெட்டப்பட்டு 2 இளம்பெண்கள் மர்ம கொலை!! பதற வைக்கும் தகவல்கள்!!

 
உடல்கள்

கர்நாடக மாநிலத்தில்  மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகா பேபி கிராமத்தில் அமைந்துள்ள ஏரியில்  ஒரு பெண்ணின் சடலம் நிர்வாண நிலையில் மிதந்து வந்தது.  பெண்ணின் சடலம் பாதியளவு மட்டுமே இருந்தது. இடுப்புக்கு கீழே உள்ள பாதி உடல் பகுதி வெட்டப்பட்டு இருந்தது.ஆனால் உடலில் மீதி பாதி கிடைக்கவில்லை. இதனால் அப்பகுதியில் பெரும் அச்சம் நிலவியது.அதேபோன்றதொரு சம்பவம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா அரகெரே கிராமத்தில் நடந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த சிக்க தேவராஜா என்ற விவசாயி இருந்து வருகிறார். அவருக்கு சொந்தமான நிலத்தில் பண்ணைக் குட்டை அமைந்துள்ளது. அந்த பண்ணை குட்டையில் கிராம மக்கள் வந்து மீன் பிடித்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் அந்த பண்ணைக் குட்டையில் மீன் பிடிப்பதற்காக அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் தூண்டில் வீசினார். அப்போது அவரது 
அப்போது தூண்டிலில் சிக்கி மற்றொரு பெண்ணின் உடல் நிர்வாண நிலையில் வந்தது. அந்த உடலும் பாதியளவு மட்டுமே இருந்ததால் பதற்றம் நிலவியது. இந்த சடலமும் இடுப்புக்கு கீழ் துண்டிக்கப்பட்டு இருந்தது. 


இதனால் அச்சமடைந்த 2 கிராமத்தையும் சேர்ந்த மக்கள் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பாண்டவபுரா மற்றும் அரகெரே போலீசார் சம்பவ இடுத்திற்கு விரைந்து வந்தனர்.சடலமாக கிடந்த 2 பெண்களின் பாதி உடல்களை கைப்பற்றி பிரே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குட்டையில் கிடைத்த பெண்ணுக்கு 40 முதல் 45 வயது வரை இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தொடர்ந்து 2 கொலைகள் வெவ்வேறு இடங்களில் நடந்தாலும், ஒரே மாதிரியாக பாதி உடல் வெட்டுபட்ட நிலையில் இருப்பதால் சீரியல் கொலைகாரன் யார் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் கொல்லப்பட்ட பெண்களின் மேல்பகுதியை வைத்துதான் அவர்களை அடையாளம் காண முடியும் என்பதால் அவை எங்கு வீசப்பட்டுள்ளன என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web