ஓபிஎஸ் தனியார் விடுதியில் ஆலோசனை!! அதிமுகவில் வெடித்த ஒற்றை தலைமை சர்ச்சை!!

 
ஒபிஎஸ்

அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது . பதவி , ஒற்றை தலைமை, அதிகாரம் என பல பிரச்சனைகள் காரணமாக இந்த பூசல் மேலும் தொடர்ந்து தீவிரமாகி வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக  பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ம் தேதி நடைபெற உள்ளது.

ஒபிஎஸ் இபிஎஸ்
குறிப்பாக  ஒற்றை தலைமை பிரச்சனை தலைதூக்கியுள்ளது. இது குறித்து சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இன்று 4வது நாளாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இபிஎஸ் சேலம் எடப்பாடி சென்றுள்ள நிலையில் இந்த கூட்டம் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன்,மைத்ரேயன் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். 

இரட்டை தலைமை தொடருமா..? இன்று கூடும் அ.தி.மு.க செயற்குழு கூட்டம்..!!
இந்நிலையில், ஓபிஎஸ்  தனியாக நாளை சென்னையில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  மாவட்ட செயலாளர்களுக்கு தொலைபேசி மூலம்  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் கட்சியில் சிலர் ஒபிஎஸ், இபிஎஸ் இருவரும் சேர்ந்து  அழைத்தால்தான்  வருவோம் எனத் தெரிவித்துள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web