ஆற்றில் படகு விபத்தில் ஒருவர் பலி!! 3 பேர் படுகாயம்!!
இந்தியா முழுவதும் கொட்டி தீர்த்த பருவமழையால் ஆறுகள், குளங்கள், அணைக்கட்டுகள் என நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. நீர்நிலைகளில் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க மத்திய மாநில அரசுகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றன.
அஸ்ஸாம் மாநிலம் நல்பாரி மாவட்டத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் படகு சவாரி வழக்கமாக இருந்து வருகிறது. இதில் படகு சவாரிக்கு சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் கலந்து கொள்வர். இந்த படகுசவாரியில் நேற்று மாலை படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, ‘‘கம்ரூப் மாவட்டத்தில் நேற்று மாலை 5 மணியளவில் கோரோமரி என்ற பகுதியில் இருந்து நல்பாரி மாவட்டத்தில் உள்ள குரிஹாமரி பகுதிக்கு படகு ஒன்று சென்றது. அதில் 12 பேர் பயணம் செய்தனர். . அபோது எதிர்திசையில் இருந்து வந்த மற்றொரு படகின் மீது பலமாக மோதியது.
இதில் படகு கவிழ்ந்து அனைவரும் நீரில் மூழ்கினர். இதைத்தொடர்ந்து ஒருவர் உயிரிழந்த நிலையில் 3 பேர் காயமடைந்துள்ளனர். இதில் பலியானவர் ஐஜுல் ஹோக் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த விபத்தால் அப்பகுதியில் சோகமும், பரபரப்பும் நிலவுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!