அச்சச்சோ!! மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை!! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தை பொறுத்து தமிழகத்தில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. நடுத்தர வர்க்கத்தின் சேமிப்பில் முதலிடத்தில் இருப்பது தங்கமே. விலை உயர்வு, ஏற்ற இறக்கத்திற்கு அப்பாற்பட்டு தங்கத்தில் முதலீடு தான் பெரும்பாலான இல்லத்தரசிகளின் ஒரே சாய்ஸாக உள்ளது. கடந்த சில வாரங்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
உலக அளவில் தங்கத்தின் தேவை அதிகமாக உள்ள நாடு இந்தியா தான் என்பதும் இந்தியர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதற்கும், அணிகலன்கள் வாங்குவதற்கும் பெருமளவு செலவு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தியா தங்கச் சந்தையில் எப்போதும் முன்னணியில் உள்ளது.சென்னையில் கடந்த இரண்டு வாரங்களாகவே தங்கம் விலை ஏறவும் இறங்கவுமாக உள்ளது. ஒரு நாள் குறைந்தால் அடுத்த நாளே உயர்த்தப்படுகிறது. நேற்று குறைந்து இருந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280-க்கு குறைந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 10 ரூபாய் உயர்ந்து, ரூ.4,785-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து, ரூ.38,280-க்கு விற்பனையாகிறது. 18 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,920-க்கு விற்பனையாகிறது.இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,000 ரூபாய் உயர்ந்து, ரூ.68,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.68.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!