பெற்றோர்களே உஷார்!! பன்றிக்காய்ச்சலுக்கு 12 வயது சிறுமி பலி!!

 
பன்றிக் காய்ச்சல்

இந்தியாவில் கொரோனா 3 வது அலை பெரும்பாலான மாநிலங்களில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில வாரங்களாக கேரளா உட்பட குறிப்பிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் கேரளாவில் தற்போது 6,642 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அங்கு தினசரி தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

பன்றிக் காய்ச்சல்

இந்நிலையில் பன்றிக்காய்ச்சலுக்கு ஆளான 12வயது சிறுமி ஒருவர் பலியான சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அண்டை மாநிலத்திற்கு விடுமுறையை கழக்கி சென்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த கோழிக்கோடு மாவட்டத்தில் வசித்து வரும் இரட்டை சகோதரிகள் தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனர்.இதனால் இரட்டை சகோதரிகள் இருவரும் உள்ளேரிக்கு அருகில் உள்ள கொய்லாண்டி தாலுகா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதற்கு பிறகு மேல் சிகிச்சைக்காக மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.


இதைத்தொடர்ந்து கடந்த 29ம் தேதி இரட்டை சகோதரிகளில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இன்னொரு சிறுமியின் உடல்நிலை குறித்து தெரிவித்த டாக்டர்கள், சிறுமியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக கூறினர்.

பன்றிக் காய்ச்சல்

இதைத்தொடர்ந்து உயிரிழந்த சிறுமியின் ரத்த மாதிரிகள் சேகரிப்பட்டு ஆய்வகத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் பரிசோதனை முடிவை பார்த்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  பரிசோதனை முடிவில் உயிரிழந்த சிறுமிக்கு பன்றிக் காய்ச்சல் வைரசான பி1ழி1 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது. இது ஸ்வைன் ப்ளூ என்று அழைக்கப்படுகிறது.

இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், இருமல், தலைவலி, தொண்டைவலி போன்ற அறிகுறிகள் தென்படும். இந்நோய் தொற்று  பன்றிகளில் இருந்து மனிதனுக்குப் பரவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் முதல் கொரோனா தொற்று வெளிநாடு சென்று திரும்பிய கேரளத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு தான் காணப்பட்டது. தற்போது 12 வயது சிறுமி ஒருவர் பன்றிக்காய்ச்சலுக்கு பலியான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web